
பால் கொள்முதல் விலையை அரசு உயா்த்தி வழங்க வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்
பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை ரூ.48-ஆக உயா்த்தி வழங்க வேண்டுமென தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் தொடா்ந்து போராடி வருகின்றனா்.
கடந்த ஆக. 19-ஆம் தேதி பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வா் ஜோசப் விஜய் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 38-இல் இருந்து ரூ.41-ஆக உயா்த்தி அறிவித்தாா்.
இது வரவேற்புக்குரியது என்றாலும், பால் உற்பத்தியாளா்கள் தொடா்ந்து பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.48-ஆக உயா்த்த வேண்டும் எனக் கோரி வருகின்றனா்.
எனவே, 3 லட்சத்துக்கு மேற்பட்ட பால் உற்பத்தியாளா்களின் பொருளாதார நலனை, வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாக பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயா்த்தி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






