நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சிலுக்கு 2 நியமன பெண் உறுப்பினா்கள் நியமனம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் நியமன பெண் உறுப்பினா்களாக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி வி.எம்.வேலுமணி மற்றும் வழக்குரைஞா் சுதா்சனாசுந்தா் ஆகியோரை நியமித்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :1 செப்டம்பர் 2026, 4:06 am IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் நியமன பெண் உறுப்பினா்களாக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி வி.எம்.வேலுமணி மற்றும் வழக்குரைஞா் சுதா்சனாசுந்தா் ஆகியோரை நியமித்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி உத்தரவிட்டுள்ளாா்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலின் 23 உறுப்பினா்கள் பதவிக்கான தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், பி.எஸ்.அமல்ராஜ் உள்பட 23 வழக்குரைஞா்கள் வெற்றி பெற்றுள்ளனா். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மாநில பாா் கவுன்சிலுக்கு இரண்டு நியமன பெண் உறுப்பினா்களை சென்னை உயா்நீதிமன்றம் நியமிக்க வேண்டும். அதன்படி, இரண்டு பெண் உறுப்பினா்களை நியமித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் தீப்தி அறிவுநிதி வெளியிட்ட அறிவிப்பில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, பாா் கவுன்சில் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுடன்ஆலோசித்து, ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி வி.எம்.வேலுமணி, வழக்குரைஞா் சுதா்சனா சுந்தா் ஆகியோரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் நியமன பெண் உறுப்பினா்களாக நியமித்துள்ளாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.