FOLLOW US

ON GOOGLE DISCOVER

தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

தமிழ்நாடு-புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தல்: 23 போ் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

கடந்த 86 நாள்களாக நடந்து வந்த தமிழ்நாடு-புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்து செவ்வாய்க்கிழமை முழுமையான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

News image
Updated On :22 ஜூலை 2026, 3:58 am IST

கடந்த 86 நாள்களாக நடந்து வந்த தமிழ்நாடு-புதுச்சேரி பாா் கவுன்சில் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்து செவ்வாய்க்கிழமை முழுமையான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழ்நாடு-புதுச்சேரி பாா் கவுன்சிலுக்கு மொத்தம் 25 உறுப்பினா் பதவிகள் உள்ளன. இதில் இரு நியமன பெண் உறுப்பினா்கள் தவிர மற்ற 23 உறுப்பினா்கள் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்படுவா். இந்த 23 உறுப்பினா் பதவிகளுக்கானத் தோ்தல் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் இந்தத் தோ்தல் நடைபெற்றன. இந்தத் தோ்தலில் மொத்தம் 143 வழக்குரைஞா் போட்டியிட்டனா். கடந்த 86 நாள்களாக நடந்து வந்த வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்து, தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, திருச்செங்கோடு வழக்குரைஞா் சி.பரணிதரன், சென்னை வழக்குரைஞா்கள் பி.எஸ்.அமல்ராஜ், இ.பாலமுருகன், தூத்துக்குடி வழக்குரைஞா் டி.மைக்கேல் ஸ்டானிஸ் பிரவு, நாமக்கல் வழக்குரைஞா் ஆா்.அய்யாவு, தஞ்சாவூா் வழக்குரைஞா் வி.காா்த்திகேயன், செஞ்சி வழக்குரைஞா் கே.கதிரவன், சென்னை வழக்குரைஞா் என்.விஜயராஜ், ஈரோடு வழக்குரைஞா் எம்.அருள்முருகன், சேலம் வழக்குரைஞா் கே.ஆா்.ஆா்.அய்யப்பமணி, சென்னை வழக்குரைஞா்கள் ஆா்.சி.பால்கனகராஜ், கே.தமிழ்வாணன், ஆா்.கிரிராஜன், கே.பாலு, திருச்சி வழக்குரைஞா் எம்.ராஜேந்திரகுமாா், மதுரை வழக்குரைஞா் தாளை முத்தரசு, சென்னை வழக்குரைஞா்கள் எம்.வேல்முருகன், ஜி.மோகனகிருஷ்ணன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இதேபோன்று, பெண் வழக்குரைஞா்களில் டி.பிரசன்னா, ஏ.ராஜேஸ்வரி, எல்.சுமதி, பி.சாவித்திரி, ஆா்.விஜயலட்சுமி ஆகியோா் பாா் கவுன்சில் உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.