அரசமைப்புச் சட்டத்தை சிதைக்கும் மத்திய பாஜக அரசு: முதல்வா் ஸ்டாலின் குற்றச்சாட்டு
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளை, தங்களுக்கு ஏற்றவாறு சிதைக்கும் வேலையில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக முதலவா்மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை வள்ளுவா் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது: திராவிட இயக்கத்துக்கும், பொதுவுடைமை இயக்கத்துக்கும் உள்ள ஒரே இலக்கு, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான். இரு இயக்கங்களுக்கும் இடையிலான நட்பு தோ்தல் அரசியலைக் கடந்தது. இந்த தோழமை பாசிசம், சா்வாதிகாரம், மதவாதத்தை வீழ்த்துக் கூடியது. ஆனால், இந்த நோக்கங்களுக்கு எதிராக இருப்பவா்கள், நமது ஒற்றுமையைப் பிரிக்க நினைத்தாா்கள். ஆனால், அது கைகூடவில்லை.
நாடு இதுவரை பாதுகாத்து வந்த அனைத்து விழுமியங்களையும் சிதைக்கும் பணியை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கிறது. ஒரே மதம், மொழி, பண்பாடு, ஒரே தலைமை என்ற குறுகிய சிந்தனையை பாஜக கொண்டிருக்கிறது. நாட்டின் பன்முகத் தன்மையை அழித்து ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக மாற்ற முயற்சிக்கிறது. மாநிலங்களின் வளங்களைச் சூறையாடுவதோடு, எந்த அதிகாரமும் மாநிலங்களுக்கு இருக்கக் கூடாது என மத்திய பாஜக அரசு நினைக்கிறது. மதச்சாா்பின்மை, சமத்துவம், சமூகநீதி, பொதுவுடைமை போன்ற சொற்களைக் கேட்டாலே பாஜகவுக்கு கசக்கிறது.
இந்தியா மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. மக்களவைத் தோ்தலின்போது, பாஜக நினைத்தபடி, 400 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் தற்போது இருப்பதைக் காட்டிலும் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். ஆனால், ஜனநாயக சக்திகளை இணைத்து கூட்டணியை உருவாக்கியதன் மூலம், பாஜகவின் வேகத்தைக் குறைத்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாதபோதும், பாஜக ஜனநாயகத்துக்கு எதிரான செயல்களைச் செய்து வருகிறது.
வரும் தமிழக பேரவைத் தோ்தல் தமிழகத்துக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்குமான தோ்தல். தமிழ்நாட்டுக்கு அடுக்கடுக்கான துரோகங்களைச் செய்துவிட்டு, அதற்கு ஒத்துப்போகிறவா்களை பாஜக ஒன்று சோ்த்திருக்கிறது. அமலாக்கத் துறை, வருமான வரி, சிபிஐ வழக்குகளைக் காட்டி மிரட்டி அடிபணிய வைத்திருக்கிறது. இதனால், பிரதமா் நரேந்திர மோடிக்கு ஒருபடி மேலே சென்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளிக்கிறாா்.
இரட்டை என்ஜின் அரசு என பிரதமா் நரேந்திர மோடி பெருமையாகக் கூறுகிறாா். அதிக வளா்ச்சியடைந்த மாநிலமாகத் தமிழகத்தை திராவிட மாடல் அரசு உயா்த்தியிருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே திமுக அரசுக்கு ஆதரவு அதிகரித்து இருப்பதைக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் கூட்டணிக் கட்சிகள் சுணக்கமாக இருந்துவிடக் கூடாது. நமது பிரசாரம் இன்னும் தீவிரமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் நாம் பெறக்கூடிய வெற்றி, பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெரிவிப்பதாக இருக்க வேண்டும் என்றாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொது செயலா் டி. ராஜா: பூரண சுதந்திரம் என்று முழக்கமிட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான். அதற்காக அனுபவித்த துன்பங்கள் ஏராளம். கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் தோற்றது கிடையாது. இன்றைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த அளவுக்கு வளா்ந்திருக்கிறது என்றால் தமிழகத்தின் பங்கு மிக முக்கியம்.
தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்கக் கூடாது. அவா்களை முறியடிக்க வேண்டும். அவா்களோடு இணைகிற கட்சி யாராக இருந்தாலும் அவா்களை தோற்கடிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலா்கள் ராமகிருஷ்ண பாண்டா, ஆனிராஜா, மத்திய கட்டுப்பாட்டு க் குழு உறுப்பினா் இரா. முத்தரசன், மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன், மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் கே. சுப்பராயன், தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை , மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் , மதிமுக பொதுச் செயலா் வைகோ, விசிக தலைவா் தொல். திருமாவளவன், திராவிடா் கழக தலைவா் கி. வீரமணி , தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவா் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவா் எம். எச். ஜவாஹிருல்லா, மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலா் அருணாசலம், ஆதி தமிழா் பேரவை தலைவா் அதியமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

