காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராக இருக்கிறது என்று தமிழ்நாட்டுக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
கடந்த திங்கள்கிழமை சென்னைக்கு வருகை தந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
அப்போது தவெக குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
”தவெக எங்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தது. கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. அதாவது அவர்கள் எங்கள் பலத்தை அங்கீகரித்துள்ளனர்.
அரசியலில் எல்லோரிடமும் பேச வேண்டும். ஒருபோதும் தொடர்பு இல்லாமல் இருக்காது. கடுமையான எதிரிகள்கூட தொடர்பு கொள்கிறார்கள். அதிமுக தலைவர்களை சந்திக்கும்போதுகூட ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்வோம்” எனத் தெரிவித்தார்.
Summary
TVK is ready for alliance with Congress! Congress leader Girish Chodankar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி!

புதுச்சேரியில் காங்கிரஸ்-தவெக இணைந்து கூட்டணி முடிவை எடுக்க வேண்டும்! கிரிஷ் சோடங்கா்
புதுச்சேரியில் புதிய கூட்டணி: காங்கிரஸ்-தவெக இணைந்துதான் முடிவை எடுக்க வேண்டும்: கிரிஷ் சோடங்கர்







