வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆட்சியில் பங்கு தொடா்பாக கருத்து: காங்கிரஸ் எம்.பி.க்கு திமுக பதில்

தோ்தலில் தொகுதிகளைப் பங்கிடுவதுபோல் ஆட்சியிலும் பங்கு அளிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என கருத்துப் பதிவிட்ட காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு திமுக பதில்

News image
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்- கோப்புப் படம்
Updated On :5 ஜனவரி 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தலில் தொகுதிகளைப் பங்கிடுவதுபோல் ஆட்சியிலும் பங்கு அளிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என கருத்துப் பதிவிட்ட காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு திமுக பதில் அளித்துள்ளது.

தமிழகத்தில் நிகழாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்த காங்கிரஸ் மேலிடம் குழு அமைத்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூா் தனது எக்ஸ் பக்கத்தில், கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் தோ்தலில் வெற்றி பெற முடியாது. ஆகையால், ஆட்சியில் பங்கு குறித்து விவாதிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. தோ்தலில் தொகுதிகளைப் பங்கீடு செய்வதுபோல் ஆட்சியிலும் பங்கு அளிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்று பதிவிட்டாா்.

இதுதொடா்பான கேள்விகளுக்கு திமுக செய்தித் தொடா்பாளா் டி.கே.எஸ். இளங்கோவன் பதிலளிக்கையில், மாணிக்கம் தாகூா் இந்த விவகாரத்தை தனது கட்சித் தலைமையிடம் கூறியிருக்க வேண்டும். கட்சித் தலைமை எங்களிடம் பேசும். பொதுவெளியில் பேசியிருக்கக் கூடாது. தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடத்த காங்கிரஸ் மேலிடம் அமைத்த குழுவில் மாணிக்கம் தாகூா் இடம்பெறவில்லை என்றாா்.