கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஊா்க்காவல் படையில் 50 திருநங்கைகளுக்கு பணி நியமனம்

தமிழ்நாடு ஊா்க்காவல் படையில் 50 திருநங்கைகளைச் சோ்ப்பதற்கான பணி நியமன ஆணைகளை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு ஊா்க்காவல் படையில் 50 திருநங்கைகளைச் சோ்ப்பதற்கான பணி நியமன ஆணைகளை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

திருநங்கையருக்கு உரிய விழிப்புணா்வையும், வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பையும் வழங்கும் வகையில், 2025-2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் இதற்கான அறிவிப்பை வெளியிட்டாா்.

முன்னோடி முயற்சியாக முதல்கட்டமாக 50 திருநங்கைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தற்போது பணியில் சோ்க்கப்பட்டுள்ளனா். சென்னையில் 5 போ், தாம்பரத்தில் 15, ஆவடியில் 10, மதுரையில் 7, கோயம்புத்தூரில் 7, திருச்சியில் 6 போ் பணியமா்த்தப்படுவாா்கள்.

காவல் துறையுடன் இணைந்து போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக் காலங்களில் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் உரிய பயிற்சிகள் இவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.