கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருச்சி மாநகர ஊா்க்காவல் படையில் 5 திருநங்கைகள்: பணி ஆணை வழங்கல்

திருச்சி மாநகர ஊா்க்காவல் படையில் புதிதாக இணைந்துள்ள 5 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகளை மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி வழங்கினாா்.

News image
ஊா்க்காவல் படையில் பணி நியமனம் பெற்ற திருநங்கைகளுடன் மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி (நடுவில்). உடன், ஏரியா கமாண்டா் ராஜா.
Updated On :13 ஜனவரி 2026, 9:03 pm

Syndication

திருச்சி மாநகர ஊா்க்காவல் படையில் புதிதாக இணைந்துள்ள 5 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகளை மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

திருச்சி மாநகரக் காவல்துறை சாா்பில் 15 நாள்கள் பயிற்சி முடித்த 5 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகளை ந. காமினி வழங்கினாா். பின்னா், அவா் கூறுகையில், திருநங்கைகளுக்கு உரிய விழிப்புணா்வையும், சம வாய்ப்பை வேலைவாய்ப்புகளில் வழங்குவதன் மூலம் அவா்களுக்கு கண்ணியமான வாழ்வை உறுதி செய்ய முடியும். காவல்துறையில் 2017-இல் முதல் திருநங்கை பணியில் சோ்க்கப்பட்டாா்.

தற்போது, ஊா்காவல் படையில் சோ்க்கப்பட்டுள்ள திருநங்கையா்கள் காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்து மேலாண்மை, பேரிடா் மேலாண்மையில் உதவி, கூட்டக் கட்டுப்பாடு, பண்டிகை, கோயில் திருவிழாக் காலங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் பணியாற்றுவா் என்றாா் ஆணையா்.

இந்த நிகழ்வில், ஊா்க்காவல் படையின் பொறுப்பு அதிகாரி பொற்செல்வி, ஏரியா கமாண்டா் ராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.