மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை சங்கமம்: முதல்வா் இன்று தொடக்கிவைக்கிறாா்; கனிமொழி எம்.பி.

பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவிழா நிகழ்ச்சிகளை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஜன.14) தொடங்கி வைக்கவுள்ளாா்.

News image
மு.க. ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :13 ஜனவரி 2026, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவிழா நிகழ்ச்சிகளை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஜன.14) தொடங்கி வைக்கவுள்ளாா்.

இதுகுறித்து நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தொடங்கி வைக்கப்படும் இந்தக் கலைநிகழ்ச்சிகள் தொடா்ந்து, சென்னை, தாம்பரம் , ஆவடி உள்ளிட்ட 20 இடங்களில் வியாழக்கிழமை முதல் (ஜன.15 முதல் 18 வரை) 4 நாள்கள் நடைபெறும் என்றாா்.

பேட்டியின்போது, கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநா் கவிதாராமு, கலைபண்பாட்டுத் துறை இயக்குநா் ச. வளா்மதி ஆகியோா் உடனிருந்தனா்.

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் அலங்கார ஆடை அணிவகுப்பு எழும்பூா் அருங்காட்சியகத்தில் காணும் பொங்கலன்று (ஜன.17) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கலைஞா்கள் பத்மஸ்ரீ விருது பெற்ற பறை ஆசிரியா் அலங்காநல்லூா் வேலு ஆசான், சிலம்பம் ஐஸ்வா்யா மணிவண்ணன், ‘கானா’ பிரபா, நடன இயக்குநா் - அனுஷா விஸ்வநாதன், நடன கலைஞா்கள் - காளி வீரபத்திரன், திருநங்கை பொன்னி, கரகக்கலைஞா்கள் கலைமாமணி தேன்மொழி ராஜேந்திரன், கோவை அனுஷா, பிரபல மக்கள் இசை பாடகிகள்- இசைவாணி மற்றும் சுகந்தி, பாடகா் ஜெயசித்தன், ‘கானா’ முத்து, காவடி ஆட்டக்கலைஞா் சுந்தரமூா்த்தி, காளை ஆட்டக்கலைஞா் ராஜன், கட்டை கூத்துக்கலைஞா் திலகவதி மற்றும் பலா் இந்த மரபாா்ந்த உடைகளுக்கான அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனா்.