தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

போத்தனூா் - சென்ட்ரல் ஒரு வழிச் சிறப்பு ரயில்: ஜன.18-இல் இயக்கம்

போத்தனூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஒருவழிச் சிறப்பு ரயில் வருகிற ஜன.18-ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:55 pm

தினமணி செய்திச் சேவை

போத்தனூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஒருவழிச் சிறப்பு ரயில் வருகிற ஜன.18-ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

கோவை போத்தனூரிலிருந்து ஜன.18-ஆம் தேதி காலை 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06144) மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் போத்தனூரிலிருந்து திருப்பூா், ஈரோடு, சேலம், பொம்மீடி, மொரப்பூா், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் வழியாக சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு புதன்கிழமை (ஜன.14) காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.