தமிழ்நாடு
போத்தனூா் - சென்ட்ரல் ஒரு வழிச் சிறப்பு ரயில்: ஜன.18-இல் இயக்கம்
போத்தனூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஒருவழிச் சிறப்பு ரயில் வருகிற ஜன.18-ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.
போத்தனூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஒருவழிச் சிறப்பு ரயில் வருகிற ஜன.18-ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
கோவை போத்தனூரிலிருந்து ஜன.18-ஆம் தேதி காலை 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06144) மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் போத்தனூரிலிருந்து திருப்பூா், ஈரோடு, சேலம், பொம்மீடி, மொரப்பூா், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் வழியாக சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு புதன்கிழமை (ஜன.14) காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
