அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தைப் பொங்கல் திருநாளான வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெறுகிறது.

News image
கோப்புப்படம்.
Updated On :14 ஜனவரி 2026, 9:46 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தைப் பொங்கல் திருநாளான வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.

ஆண்டுதோறும் தை முதல் நாளான பொங்கலன்று மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெறுகிறது.

இந்தப் போட்டிக்கான இறுதிக் கட்டப் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.

இதை வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

பின்னர், அமைச்சர் பி. மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிகழாண்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி முடிவுகள் எல்.இ.டி. திரையில் வெளியிடப்பட உள்ளது. இதில் காளைகளைப் பிடித்த வீரர்களின் விவரங்கள் வெளியிடப்படும்.

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் அதிகமான காளைகளை களமிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு விதிமுறைகளை மீறுவோர் மீது நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.