மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து.. வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் ஆரவாரம்!

வீட்டின் முன் குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்ததைப் பற்றி...

News image
வீட்டின் முன் குவிந்த ரசிகர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்.
Updated On :15 ஜனவரி 2026, 4:12 am

இணையதளச் செய்திப் பிரிவு

வீட்டின் முன் குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நடிகர்கள், முக்கியப் பிரமுகர்கள் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன் குவிந்து திரண்டிருந்த ரசிகர்களை நோக்கி நடிகர் ரஜினிகாந்த் கைகளை அசைத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரஜினியை நேரில் பார்த்து ஆரவாரம் செய்த அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து சால்வை உள்ளிட்ட பொருள்களையும் அன்பளிப்பாக வழங்கினர்.

தொடர்ந்து அங்கு திரண்டிருந்த செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், “ எல்லாருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும். முக்கியமாக விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் சந்தோசமாக இருந்தால்தான் மற்றவர்கள் அனைவரும் சந்தோசமாக இருக்க முடியும்” என்றார்.

அதைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் புதிய படத்துக்கான அப்டேட் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர், “ஏப்ரலில் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.