உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

நாகர்கோயில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்! நாளை முன்பதிவு

நாகர்கோயில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சிறப்பு ரயில்

Published On :16 ஜனவரி 2026, 1:53 pm IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள், மீண்டும் சென்னை திரும்ப வசதியாகக நாகர்கோயில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 18ஆம் தேதி நாகர்கோயில் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும், சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்குத் தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஜன.18ஆம் தேதி நாகர்கோயில் - தாம்பரம் இடையே ஒரு வழிப் பாதையில் தெற்கு ரயில்வே இயக்கும் இந்த சிறப்பு ரயிலானது, நாகர்கோயிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும். இது ஜன. 19-ஆம் தேதி காலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விடுமுறை முடிந்து, சொந்த ஊர்களில் இருந்து திங்கள்கிழமை காலை சென்னை திரும்பி, அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வோருக்கு வசதியாக இந்த ரயில் இயக்கப்பட விருக்கிறது.

நின்று செல்லும் ரயில் நிலையங்கள்

நின்று செல்லும் ரயில் நிலையங்கள்

நாகர்கோயிலில் இருந்து நெல்லை, விருதுநகர், மதுரை, திரச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்தடைகிறது.

Summary

A special train is being operated between Nagercoil - Tambaram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.