சௌதி அரேபியாவில் மிக வயதான நபர் என்று அறியப்பட்டு வந்த ஷேக் நாசர் பின் ராடன் அல் ரஷீத் அல் வாடா, தன்னுடைய 142-வது வயதில் உடல் நலக் குறைவால் காலமானார்.
சௌதி அரேபியாவின் வரலாற்றில் புதிய நாடாக உருவானது முதல், அதன் அனைத்து ஆட்சியாளர்களின் ஆட்சியிலும் இவர் வாழ்ந்திருக்கிறார் என்பது இவரது குடும்பத்தினர் பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அதாவது, சௌதி அரேபியாவின் நிறுவனர் மன்னர் அப்துல் அஜீஸ் முதல், தற்போதைய மன்னர் சல்மான் வரை அனைவரின் ஆட்சியையும் இவர் பார்த்துள்ளார். இவரது வாழ்க்கை, வெறும் நீண்ட ஆயுளுக்கான உதாரணமாக மட்டுமல்லாமல், பக்தி, ஒழுக்கம் ஆகியவற்றுக்கும் முன்னுதாரனமாக மாறியிருக்கிறது.
வெறும் பாலைவனமாக இருந்த சௌதி அரேபியா, தற்போது நவீன நகரமாக மாறியிருப்பதை இவர் நேரடியாக தன்னுடைய கண்களால் கண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
2026ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி இவர் தன்னுடைய 142வது வயதில் காலமானார். இவரது பிறப்பு தேதி துல்லியமாக இருப்பின், இவர் 1800-ஆவது ஆண்டுகளில் பிறந்திருக்க வேண்டும். அப்போது சௌதி அரேபியா என்றொரு நாடே இருந்திருக்காது.
இவர் 40 முறை ஹஜ் புனித பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு தற்போது 134 பிள்ளைகள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன் பேத்திகள் இருக்கிறார்கள். இவர் கடைசியாக தன்னுடைய 110வது வயதில் திருமணம் செய்து மேலும் ஒரு மகளுக்குத் தந்தையானார்.
இவரது இறுதிச் சடங்கில், அந்நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் சுமார் 7000 பேர் இறுதிச் சடங்கில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தியிருக்கிறார்கள்.
Summary
A man in Saudi Arabia got married at the age of 110 and became a father, passing away at the age of 142.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தந்தை அடித்துக் கொலை: மகன் கைது! திருமணம் செய்து வைக்காத விரக்தியில் தகராறு!!

சௌதி அரேபியா - பாகிஸ்தான் இடையே வணிக மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம்!

சௌதி புரோ லீக்: முதல்முறையாக கோப்பை வென்ற ரொனால்டோ!

சௌதி புரோ லீக்கில் 100ஆவது கோல் அடித்த ரொனால்டோ..! முதல் கோப்பை வெல்வாரா?
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK




