கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கடலோர மாவட்டங்களில் நாளைமுதல் மழைக்கு வாய்ப்பு

News image
Updated On :22 ஜனவரி 2026, 1:08 am

தினமணி செய்திச் சேவை

கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன. 23) முதல் ஜன. 27 வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தைவிட்டு விலகிய நிலையில், வியாழக்கிழமை (ஜன. 22) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

இருப்பினும், வெள்ளிக்கிழமை (ஜன. 23) முதல் ஜன. 27 வரை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வட வானிலை நிலவக்கூடும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

உறைபனி எச்சரிக்கை: தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஜன. 22) இரவு அல்லது வெள்ளிக்கிழமை (ஜன. 23)அதிகாலை உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.