

ஆளுநர் உரையில் மாற்றுக் கருத்து இருந்தால், மத்திய அரசைத்தான் ஆளுநர் கேட்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் திராவிட மாடல்: மீண்டும் நாங்கதான் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம் என்ற தலைப்பில் "ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு நான் அளித்த பதிலுரை, ஆளுநருக்கே அளித்த விளக்கவுரையாக, 5 ஆண்டு சாதனை அறிக்கையாக அமைந்துவிட்டது.
தமிழ்நாடு 'நம்பர் 1' என நாம் ஆளுநர் உரையில் குறிப்பிட்டதில் ஆளுநர் ரவி-க்கு மாற்றுக்கருத்து இருக்குமேயானால், அவர் மத்திய அரசைத்தான் கேள்வி கேட்க வேண்டும்.
ஏனென்றால், நாம் சொன்னது அனைத்தும் மத்திய அரசு அளித்த தரவுகள்தான். 2021-இல் நிர்ணயித்த இலக்கில் வென்றுவிட்டோம்! இனி 2026-லும் வெல்வோம் ஒன்றாக" என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.