தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

தைப்பூசத் திருவிழா: அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை சிறப்பு ரயில்கள்

தைப்பூசத் திருவிழாவையொட்டி அரக்கோணம்-திருத்தணி இடையே நாளை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :31 ஜனவரி 2026, 1:43 pm

தைப்பூசத் திருவிழாவையொட்டி அரக்கோணம்-திருத்தணி இடையே நாளை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் 5 ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயில் ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

காஞ்சிபுரம், வேலூர் திருவண்ணாமலை, ஆந்திர மாநிலம் திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணி வந்து, தைப்பூச விழாவில் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபடுவர்.

இந்த நிலையில் தைப்பூசத் திருவிழாவையொட்டி பயணிகளின் வசதிக்காக, அரக்கோணம்-திருத்தணி இடையே நாளை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, 4 மின்சார சிறப்பு ரயில்கள் திருத்தணி வரை நீட்டிக்கப்பட்டு சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Summary

The Chennai Railway Division has announced that special electric trains will be operated between Arakkonam and Thiruthani tomorrow on the occasion of the Thaipusam festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.