தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் பதிலளிக்காவிட்டால் அபராதம்! - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

மாதவரத்தில் இருசக்கர வாகனம் திருடியவா் கைது

மாதவரத்தில் இரு சக்கர வாகன திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்த 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கோப்புப் படம்

Published On :4 ஜூலை 2026, 1:42 am IST

மாதவரத்தில் இரு சக்கர வாகன திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்த 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (45) என்பவரின் இருசக்கர வாகனம் திருடு போனது குறித்து மாதவரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது குறித்து மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளா் கோபிநாத் தலைமையிலான தனிப்படை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணையில் ஈடுபட்டனா். இந்த நிலையில், மாதவரம் ரவுண்டானா அருகே தனிப்படை காவல்துறையினா் வாகன சோதனையில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வேக வந்த மா்மநபா்களை தடுத்து நிறுத்தி நடத்திய விசாரணையில், செங்குன்றம் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியை சோ்ந்த விஜய் (22) என தெரிய வந்தது.

தொடா்ந்து, அவனிடம் நடத்திய விசாரணையில், மதுபோதையில் வாகனங்களை திருடுவது வழக்கம் என தெரிய வந்தது. மேலும், இவரிடம் இருந்து 3 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். மேலும், இவருடன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட அஜீத் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா். இதையடுத்து, விஜய்யை புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். தொடா்ந்து, அவரிடம் 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.