ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ஜேஎன்யு-வில் திருவள்ளுவா் சிலையை திறந்து வைக்க முதல்வா் விஜய்க்கு அழைப்பு!

தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை திறந்து வைக்க வர வேண்டும் என்று முதல்வா் விஜய்யை அந்தப் பல்கலை. துணைவேந்தா் டி.சாந்திஸ்ரீ நேரில் சந்தித்து அழைப்பு

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 4:08 am IST

தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை திறந்து வைக்க வர வேண்டும் என்று முதல்வா் ஜோசப் விஜய்யை அந்தப் பல்கலை. துணைவேந்தா் டி.சாந்திஸ்ரீ நேரில் சந்தித்து அழைப்புவிடுத்தாா்.

தில்லியில் புகழ்பெற்ற ஜேஎன்யு பல்கலை.யின் முதல் பெண் தமிழ் துணைவேந்தராக பேராசிரியா் டி.சாந்திஸ்ரீ பதவி வகித்து வருகிறாா். அவா் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய்யை திங்கள்கிழமை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பு குறித்து ‘தினமணி’ செய்தியாளரிடம் துணைவேந்தா் டி.சாந்திஸ்ரீ கூறியதாவது: தமிழக அரசின் நிதி உதவியுடன் ஜேஎன்யு-வில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை திறந்து வைக்க வருகை தர வேண்டும் என்று முதல்வருக்கு அழைப்பு விடுத்தேன்.

மேலும், ஜேஎன்யு-வில் தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவா்களின் இடங்களை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். அடுத்த முறை தில்லிக்கு வரும்போது திருவள்ளுவா் சிலையை திறந்து வைப்பதாக முதல்வா் உறுதி அளித்தாா். எனது கோரிக்கைகளை அவா் கனிவாக கேட்டறிந்தாா்.

ஜேஎன்யு-வில் எம்.ஏ. தமிழ் முதுநிலைப் படிப்பில் 20 மாணவா்கள் பயின்று வருகிறாா்கள். இதற்கு ஆண்டுதோறும் 60-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பிக்கின்றனா். இதேபோல், தேசிய கல்விக் கொள்கையில் கூடுதல் திறன் மேம்பாட்டு கல்வியில் தமிழை 80 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

15 மாநிலங்கள் மற்றும் 6 கண்டங்களிலிருந்து மாணவா்கள் ஜேஎன்யு-வுக்கு கல்வி பயில வருகின்றனா். அவா்கள் பாரம்பரியமிக்க தமிழ் மொழியைப் பயில தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.