FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

அரசுப் பள்ளியில் பட்டியலின மாணவனுக்குக் கத்திக்குத்து!

சிவகங்கையில் அரசு பள்ளி மாணவனை சக வகுப்பு மாணவர்கள் கத்தியால் குத்தியுள்ளனர்.

News image

கத்தியால் குத்தப்பட்ட மாணவன்

Updated On :15 ஜூலை 2026, 4:05 pm IST

சிவகங்கை மாவட்டம், மல்லல் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவனை, அதே வகுப்பில் படிக்கும் சக மாணவர்கள் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிரஞ்சான் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் பிரசாத் (17) என்கிற மாணவனுக்கும், அதே பள்ளியில் படிக்கும் சக வகுப்பு மாணவர்களுக்கும் இடையே சில நாள்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மோதல் முற்றிய நிலையில், இன்று காலை பள்ளி வகுப்பறையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக மாணவர்கள், சஞ்சயை குத்திவிட்டு தப்பியோடினர்.

நெஞ்சு, முதுகுப் பகுதிகளில் 4 முறை கத்தியால் குத்தப்பட்ட மாணவனை, பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

மாணவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய மாணவர்களைத் தேடிவரும் காவல்துறையினர், இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

In Sivaganga, a government school student was stabbed with a knife by his classmates.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.