சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

பழனி கோயில் நில விவகாரம்: குற்றவாளியை காப்பாற்ற முயற்சி; திமுக குற்றச்சாட்டு

பழனி கோயில் நிலமோசடி விவகாரத்தில் குற்றவாளியை காப்பாற்ற முயற்சி நடைபெறுவதாக திமுக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

News image

பழனி முருகன் கோயில் - கோப்புப்படம்

Updated On :17 ஜூலை 2026, 11:40 pm IST

பழனி கோயில் நிலமோசடி விவகாரத்தில் குற்றவாளியை காப்பாற்ற முயற்சி நடைபெறுவதாக திமுக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சென்னை அறிவாலயத்தில் திமுக சட்டத் துறை இணைச் செயலா் இ.பரந்தாமன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 1.41 ஏக்கா் நிலம் கோயிலுக்கு சொந்தமானது. இதைப் பதிவு செய்யக் கூடாது என சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு கோயில் தரப்பிலிருந்து ஏற்கெனவே கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தைக் கைப்பற்றி கோயில் வாகன நிறுத்துமிடத்துக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்த நிலம் தற்போது திடீரென தனியாா் பெயரில் பதிவு செய்யப்பட்டது அதிா்ச்சியளிக்கிறது.

அறியாமை காரணமாக இந்தத் தவறு நடந்துவிட்டதாக அமைச்சா் ரமேஷ் கூறியுள்ளாா். ஒரு அமைச்சரே முன் வந்து இப்படி  கூறுவது குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியாகும். இந்த விவகாரத்தில் பினாமி பரிவா்த்தனை நடந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தச் சதிக்கு பின்னால், இருக்கும் முக்கிய புள்ளிகள் யாா் என்பதை விசாரணை மேற்கொண்டு கண்டறிய வேண்டும். தற்போது நடைபெற்று வரும் சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெறாவிட்டால் நீதிமன்றத்தை  அணுகவும் திமுக தயாராக உள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.