உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தனியாா் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தனியாா் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது...

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :19 ஜூலை 2026, 2:11 am IST

வனத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் தனியாா் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆா்வலா் எஸ்.முரளிதரன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் வனத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கும், கோயில் யானைகளுக்கும் சிகிச்சை அளிக்க தனியாா் தொண்டு நிறுவனத்துக்கு தலைமை வனப் பாதுகாவலா் அனுமதி வழங்கியுள்ளாா்.

வனத் துறையில் தகுதியான கால்நடை மருத்துவா்கள் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள நிலையில், வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாா் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டிய அவசியம் குறித்து வனப் பாதுகாவலா் விளக்கம் அளிக்கவில்லை.

எனவே, யானைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாா் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோயிருந்தாா்.

இந்த வழக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாா் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிட்டாா். மேலும், இந்த மனுவுக்கு வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வனத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

Summary

Private NGOs should not be involved in treating elephants: High Court orders.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.