சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், துணைத் தலைவர் திடீர் ராஜிநாமா!

திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், துணைத் தலைவர் திடீர் ராஜிநாமா செய்திருப்பது குறித்து...

News image

திருப்பரங்குன்றம் கோயில் - கோப்புப்படம்

Updated On :21 ஜூலை 2026, 8:34 am IST

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்கள் இருவர் தங்களது பதவிகளை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தனர்.

தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகியோர் தங்கள் பதவிகளைத் திடீரென ராஜினாமா செய்து கடிதம் அளித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராக சத்யபிரியா பாலாஜி, துணைத் தலைவராக சண்முகசுந்தரம் மற்றும் குழு உறுப்பினராக ராமையா, பொம்ம தேவன், மணிச் செல்வம் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இவர்கள், ஏற்கெனவே கடந்த முறையும் அறங்காவலர்களாகப் பணியாற்றிய நிலையில், இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்று 6 மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையிலும், இன்னும் ஒன்றரை ஆண்டுகள் பதவிக் காலம் மீதம் உள்ள நிலையிலும் அறங்காவலர் குழு தலைவராக செயல்பட்டு வந்த சத்யபிரியா, துணைத் தலைவர் சண்முகசுந்தரம், குழு உறுப்பினர் ராமையா ஆகிய மூவரும் தங்கள் பதவிகளை நேற்று ராஜிநாமா செய்தனர்.

தங்கள் ராஜிநாமா கடிதத்தை, திருக்கோயில் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அவர்கள் அளித்துள்ளனர். பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பே, மூவரும் ஒரே நேரத்தில் ராஜிநாமா செய்ததற்கான முழுமையான காரணங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. ஐந்து பேர் கொண்ட அறங்காவலர் குழுவில், இதுவரை மூன்று பேர் ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The Chairman of the Board of Trustees and two trustees of the Arulmigu Subramania Swamy Temple in Thiruparankundram resigned from their posts on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.