புதுக்கோட்டை: முதல்வர் ச. ஜோசப் விஜய் நடித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான 'ஜன நாயகன்' திரைப்படத்தை புதுக்கோட்டை விஜய் திரையரங்கில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் காட்சியை மாநிலத் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் பார்த்தார்.
படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அமைச்சர் பர்வேஸ் கண்ணீர் விட்டு அழுதார்.

இதுதான் தனது கடைசிப் படம் என விஜய் அறிவித்துள்ளதால், நீண்ட கால ரசிகரான பர்வேஸ் உணர்ச்சிவயப்பட்டு அழுததாக தவெகவினர் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாநகரில் விஜய், ஆர்கேபி, சாந்தி ஆகிய மூன்று திரையரங்குகளிலும் ஜனநாயகன் திரையிடப்பட்டுள்ளது.

காலை 9 மணிக்குத் தொடங்கிய முதல் காட்சியை ஏராளமான ரசிகர்கள் உற்சாகமாக ஆட்டம், பாட்டத்துடன் பார்க்க வந்தனர்.
Summary
Minister Parvez shed tears after watching the movie Jana Nayagan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










