சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: பாளை சிறையில் மார்க்கண்டேயன் எம்எல்ஏவை சந்தித்த உதயநிதி

முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதால் கைதாகி, பாளை சிறையில் உள்ள மார்க்கண்டேயன் எம்எல்ஏவை சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்

News image

உதயநிதி - From video grab

Updated On :27 ஜூலை 2026, 1:47 pm IST

நெல்லை: முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைதான எம்எல்ஏ மார்க்கண்டேயனை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான தி.மு.க.வைச் சேர்ந்த மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை பார்ப்பதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ இன்று மத்திய சிறைக்கு வருகை தந்தார்.

அப்போது அவருடன் முன்னாள் அவைத் தலைவர்கள் ஆவுடையப்பன், அப்பாவு, முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் மற்றும் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறைக்குள் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்த நிகழ்வின் போது சிறை வாயிலில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து கோஷங்கள் எழுப்பினர். இதன் காரணமாக சிறைச்சாலை முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் வருகையை ஒட்டி துணை மேயர் ராஜு, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பேச்சி பாண்டியன், வக்கீல் பிரபாகரன், மாநில நெசவாளரணி துணைச் செயலாளர் பெருமாள் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Summary

Defamatory remarks against the Chief Minister: Udhayanidhi met MLA Markandeyan at Palayamkottai Prison.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.