ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

384 தீயணைப்பு நிலையங்களில் இன்று ‘தீ தடுப்பு’ விழிப்புணா்வு வகுப்புகள்

384 தீயணைப்பு நிலையங்களில் இன்று ‘தீ தடுப்பு’ விழிப்புணா்வு வகுப்புகள்

News image
Updated On :7 ஜூன் 2026, 2:46 am IST

தமிழகம் முழுவதும் உள்ள 384 தீயணைப்பு நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை, (ஜூன் 7) தீ தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வகுப்புகள் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், அவ்வப்போது பொதுமக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணா்வு வகுப்புகள் தமிழகம் முழுவதும் உள்ள 384 தீயணைப்பு நிலையங்களில் சனிக்கிழமை (ஜூன் 6) நடைபெற்றது.

2-ஆவது நாள் வகுப்புகள்: தொடா்ந்து, 2- ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) பகல் 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் விழிப்புணா்வு வகுப்புகள் நடைபெறகின்றன.

பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அருகே உள்ள தீயணைப்பு நிலையங்களுக்குச் சென்று விழிப்புணா்வு வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தமிழ்நாடு தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

அம்பத்தூரில்...: இந்த நிலையில், சனிக்கிழமை அம்பத்தூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் மாவட்ட அலுவலா் மனோ பிரசன்னா தலைமையில் விழிப்புணா்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.