அதிமுக தலைமையின் மீதான நம்பிக்கையின்மையால்தான் அதிமுகவினர் தவெகவில் இணைவதாக தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "அதிமுகவின் தலைமையில் ஸ்திரத்தன்மை இல்லை. அவர்களின் தலைமை என்ன செய்யப் போகின்றனர் என்பது தெரியவில்லை.
இன்னும் கொஞ்ச நாள்களில், எடப்பாடி பழனிசாமியே திமுகவில் இணையலாம் அல்லது கட்சியை பாஜகவுடன் இணைக்கும் நிலையில்தான் அவர் இருக்கிறார்.
மத்திய அமைச்சர் பதவி கொடுப்பதாக இருந்தால் பாஜகவுடனோ மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக இருந்தால் திமுகவுடனோ அதிமுகவை இணைக்கும் நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில்தான் அவர் மீதும் கட்சியின் மீதும் நம்பிக்கையில்லாமல், கட்சி கைவிட்டு விட்டது என்றும், சுய லாபத்துக்காக எடப்பாடி பழனிசாமி இவ்வாறு செய்கிறார் என்றும் 40 - 50 ஆண்டுகளாக உழைத்த தொண்டர்களெல்லாம் மன வருத்தத்துடன் கட்சியிலிருந்து விலகி, இங்கு இணைகின்றனர்" என்று தெரிவித்தார்.
Summary
Is Edappadi Palaniswami merging the AIADMK with the BJP for the sake of a Union Minister post?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்வி

அரசு இல்லத்தை காலி செய்தார் எடப்பாடி பழனிசாமி! ராயப்பேட்டையில் குடியேறினார்!
கோட்-சூட்-போட்டோஷூட் மாடல் ஆட்சி: சிறுவன் பாலியல் துன்புறுத்தல் சம்பவத்துக்கு இபிஎஸ் கண்டனம்

தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ்! மாவட்டச் செயலர்களுடன் ஆலோசனை!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


