விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு இன்று(ஜூன் 7) திமுகவில் இணைந்தார்.
அண்மையில், விசிகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு, தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுவில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில், ஆதரவாளர்கள் 1200 பேருடன் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எதிர்த்து அந்தக் கட்சியின் ஊடகப்பிரிவு முதன்மைச் செயலரும், செய்யூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான பனையூர் பாபு அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
”விசில் அடிப்பவர்கள் எல்லாம் திரையரங்கத்துக்குதான் செல்ல வேண்டும், சட்டப்பேரவைக்கு வரக் கூடாது. பெரியார் ஈவெராவும், அம்பேத்கரும் பேசிய அரசியலையும் கொள்கைகளையும் வீழ்த்துவதற்கு வந்தவர் விஜய் என்று பேசிய தொல். திருமாவளவன், தற்போது தவெகவுடன் கைகோக்கவும், இயக்கத்தின் கொள்கையை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சமாக இருக்கிறது.
விசிக பயணித்துக்கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல் அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் தலைமையின் கீழ் இனியும் தன்னால் பயணிக்க இயலாது. இது எனது மனசாட்சியை உணர்த்துகிறது.
எனவே, விசிகவில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் முழுமையாக விலகுகிறேன்” என்று தெரிவித்து விசிகவில் இருந்து விலகிய நிலையில், இன்று திமுகவில் இணைந்தார்.
Summary
Former MLA Panaiyur Babu, who left the Viduthalai Chiruthaigal Katchi (VCK), joined the DMK today (June 7).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல்வர் தலைமையில் எஸ்சி, எஸ்டி விழிப்புணர்வுக் குழுவில் திருமாவளவன், ஆ. ராசா?
என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்

நான் சீட்டுக்காக விசிகவில் இருந்து வெளியே வரவில்லை: பனையூர் பாபு விளக்கம்

பெயரளவில் மட்டுமே அம்பேத்கர்! திமுகவில் இணைந்த பிறகு விசிக முன்னாள் MLA பனையூர் பாபு பேட்டி!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




