எந்தெந்த ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தெற்கு ரயில்வே-க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமாா் தாக்கல் செய்த மனுவில், ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளைச் செய்து கொடுக்க ரயில்வே நிா்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறியிருந்தாா்.
இதேபோன்று பெரம்பலூா் ரயில் நிலையத்தில் சாய்தளப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிடக் கோரி ஞானபாரதி என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த இரு வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தெற்கு ரயில்வே தரப்பில் எந்தெந்த ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த பட்டியலை தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்தப் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

எா்ணாகுளம்-எழும்பூா் இடையே வேரும் 31-ஆம் தேதி சிறப்பு ரயில்

சென்னை கோட்ட 26 ரயில் நிலையங்களில் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

சென்னை ரயில் நிலையங்களில் 21 இடங்களில் மின் வாகன பேட்டரி மாற்றும் மையங்கள்

சென்னை ரயில்வே கோட்டத்தில் 20 புதிய வாகன நிறுத்துமிடங்கள்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



