சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள்: தெற்கு ரயில்வே-க்கு நீதிமன்றம் உத்தரவு

எந்தெந்த ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தெற்கு ரயில்வே-க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 2:34 am IST

எந்தெந்த ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தெற்கு ரயில்வே-க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமாா் தாக்கல் செய்த மனுவில், ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளைச் செய்து கொடுக்க ரயில்வே நிா்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறியிருந்தாா்.

இதேபோன்று பெரம்பலூா் ரயில் நிலையத்தில் சாய்தளப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிடக் கோரி ஞானபாரதி என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த இரு வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தெற்கு ரயில்வே தரப்பில் எந்தெந்த ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த பட்டியலை தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்தப் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.