தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலத்தவர் வாக்களித்து திரும்பியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர் வாக்களித்திருக்கலாம் என்று கருதும் பதிவுகளை மத்திய மற்றும் மாநில சட்டம் ஒழுங்கு விசாரணை அமைப்புகள், தேர்தல் ஆணையத்திடம் கோரியிருக்கின்றன. மேலும், தேர்தல் நாளுக்கு முன்பு தமிழகம் வந்து, ஏப். 23ஆம் தேதியிலிருந்து ஒரு சில நாள்களுக்குப் பின் வெளிநாடு சென்றவர்களின் விவரங்களையும் இந்திய குடியுரிமைத் துறையிடம் கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தேர்தலில் வாக்களித்த 40 வெளிநாட்டினர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கும் விசாரணை அமைப்பு, இதுபோல தேர்தலுக்கு முன்பு வந்து, வாக்களித்துவிட்டு தேர்தல் முடிந்ததும் உடனடியாக வெளிநாடு திரும்பியவர்கள் யாரேனும் இருக்கலாம் என்பதால், அவர்களையும் கண்டுபிடிக்க, விசாரணை அமைப்புகள் தீவிரம்காட்டி வருகின்றன.
மேலும், வாக்களிப்பதற்காக பல்வேறு நகரங்களிலிருந்து தமிழகம் வந்தவர்களின் சமூக வலைத்தளக் கணக்குகளையும் காவல்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.
சிறப்புத் தீவிர திருத்த முறையின்போது, எவ்வாறு இவர்களது பெயர்கள் மட்டும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படாமல் போனது என்பது குறித்தும் ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு, இந்தியாவில் வாழ்வதாக அவர்கள் தெரிவித்து வாக்குரிமை பெற்றிருந்தால், இது மிகப்பெரிய குற்றம் என்றும், மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மே மாதம் இரண்டாவது வாரத்தில் மதுரை, சென்னை விமான நிலையங்களிலிருந்து இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்லவிருந்த வெளிநாட்டினரின் ஆள்காட்டி விரலில் அழியாத மை இருந்ததை, சுங்கத் துறையினர் கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் தமிழ்நாட்டில் வாக்களித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதுபோல, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டனில் வாழ்ந்துவரும் ஒருவரும், சென்னை வேளச்சேரி தொகுதியில் வாக்களித்ததை ஒப்புக் கொண்ட நிலையில் சென்னை விமான நிலையத்தில அவர்கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.
தீவிர திருத்தப் பணியின்போது, இவர்களது சார்பில் வேறு யாரோ கையெழுத்திட்டு படிவங்களை வழங்கி, இவர்களது வாக்குரிமையை நிலைத்திருக்கச் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் பலரின் வாக்குரிமைகள் இந்த தீவிர திருத்த நடைமுறையால் பறிபோன நிலையில், வெளிநாடுகளிலிருந்து வந்து வாக்களித்து பலரும் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் வாக்குரிமையை இழந்த பலருக்கும் பெரும் வேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது என்று கூறப்படுகிறது.
Summary
Foreigners voting in the election! Sudden turn in the investigation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்ற தவெக எம்எல்ஏ மனு இன்று விசாரணை!

மேற்கு வங்க வாக்குப்பதிவு விறுவிறு! ரிக்ஷாவில் வந்து வாக்களித்த மஹுவா மொய்த்ரா!

நாமக்கல்: திருமணம் முடிந்து தம்பதியாக வந்து வாக்களித்த புதுமணப்பெண்!

தேர்தல் நாள்.. வாக்களித்த தலைவர்கள்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



