/
இலங்கைக் குடியுரிமை பெற்று திருச்சியில் வாக்களித்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி தெப்பக்குளம் சஞ்சீவி நகரைச் சோ்ந்தவா் பெ. சாமிநாதன் (68). 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிக்கும் இவருக்கு இலங்கையிலும் குடியுரிமை உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவா் இலங்கை செல்ல திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சனிக்கிழமை காலை சென்றாா். அங்கு குடியேற்றப் பிரிவு சோதனையின்போது அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் இவா் வாக்களித்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் திருச்சி பன்னாட்டு விமான நிலையக் குடியேற்றப் பிரிவு அதிகாரி முகாஷ்ராம் கௌதம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சாமிநாதன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
திருச்சியில் வாக்களித்த இலங்கை குடியுரிமை பெற்றவா் கைது

இரு சக்கர வாகனம் எரிப்பு: போலீஸாா் விசாரணை

இளம்பெண் உயிரிழப்பு போலீஸாா் விசாரணை

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



