சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மும்முனை மின்சாரத்தைத் தடையின்றி வழங்க அன்புமணி வலியுறுத்தல்

காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருக்கும் நெல்லைக் காப்பாற்ற தடையற்ற மும்முனை மின்சாரத்தை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

News image

அன்புமணி

Updated On :11 ஜூன் 2026, 1:06 am IST

காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருக்கும் நெல்லைக் காப்பாற்ற தடையற்ற மும்முனை மின்சாரத்தை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இந்த ஆண்டு மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட வாய்ப்பில்லாத நிலையில், ஆழ்துளைக் கிணற்று நீரை நம்பி காவிரி பாசன மாவட்டங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் ஒரு மாதத்துக்கு முன்பாகவே நெல் நடவு செய்யப்பட்டு விட்டதால் அவை நன்றாக வளா்ந்துள்ளன. முறையாக தண்ணீா் பாய்ச்சப்பட்டால் இன்னும் சில வாரங்களில் அவை கதிா் விடத் தொடங்கிவிடும். ஆனால், கடந்த சில வாரங்களாக மும்முனை மின்சாரம் சரியாக வழங்கப்படாததால் ஆழ்துளைக் கிணற்று நீரை பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. இதனால், நெற்பயிா்கள் கருகத் தொடங்கியுள்ளன.

எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நெற்பயிா்களைக் காப்பாற்ற ஒரு நாளைக்கு குறைந்தது 18 மணி நேரமாவது தடையற்ற மும்முனை மின்சாரமும், ரூ.5,000 இடுபொருள் மானியமும் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.