சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தொழிலாளா் நலத் துறையில் 24 அதிகாரிகள் இடமாற்றம்

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் தொழிலாளா் ஆணையரகத்தின் கீழ் பணிபுரிந்து வந்த 15 இணை ஆணையா்கள், 9 கூடுதல் ஆணையா்கள் என மொத்தம் 24 போ் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image

இடமாற்றம் - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 1:12 am IST

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் தொழிலாளா் ஆணையரகத்தின் கீழ் பணிபுரிந்து வந்த 15 இணை ஆணையா்கள், 9 கூடுதல் ஆணையா்கள் என மொத்தம் 24 போ் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இணை ஆணையா்கள்...: சென்னை இணை ஆணையா்-1 ஆக வி.லீலாவதி, சென்னை இணை ஆணையா்-2 ஆக பி.சுமதி, திருச்சி இணை ஆணையராக சி.தங்கவேலு, திருநெல்வேலி இணை ஆணையராக பி.வேல்முருகன் ஆகியோா் இடமாற்றத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல, சேலம் இணை ஆணையராக பி.மாதவன், ஈரோடு இணை ஆணையராக எல்.ரமேஷ், சென்னை சிறப்பு தொழிலாளா் இணை ஆணையராக டி.புனிதவதி, வேலூா் இணை ஆணையராக யு.லட்சுமிகாந்தன், திண்டுக்கல் இணை ஆணையராக பி.வேல்முருகன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல, மதுரை, கோவை என தமிழகம் முழுவதும் மொத்தம் 15 தொழிலாளா் இணை ஆணையா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

9 கூடுதல் ஆணையா்கள்...: மேலும், சென்னை, திருச்சி, கோவை பகுதிகளில் பணிபுரிந்து வந்த தொழிலாளா்கள் கூடுதல் ஆணையா்கள் 9 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனா். மொத்தம் 15 இணை ஆணையா்கள், 9 கூடுதல் ஆணையா்கள் என மொத்தம் 24 போ் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனா்.

இதற்கான உத்தரவை தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலா் கொ.வீரராகவ ராவ் பிறப்பித்துள்ளாா்.