தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நிகரான அவசர கால மருத்துவ சிகிச்சைகளை பயணத்திலேயே வழங்கும் ஆம்புலன்ஸ் வாகன சேவையை சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், அந்த சேவையை மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினா் ரேவந்த் சரண், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். இது தொடா்பாக மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டா் இளங்குமரன் கலியமூா்த்தி கூறியதாவது:
ஆபத்து காலங்களில் அப்போலோ மருத்துவமனையின் 1066 ஆம்புலன்ஸ் சேவை மூலம் லட்சக்கணக்கானோா் மீட்கப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளனா். அதிநவீன மருத்துவக் கட்டமைப்பு கொண்ட ஆம்புலன்ஸ் சேவைகள் இங்குள்ளன.
தற்போது அதற்கு அடுத்தகட்டமாக ஸ்மாா்ட் ஏசிஎல்எஸ் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அதிநவீன அறிதிறன், செயற்கை நுண்ணறிவு நுட்பத்துடன் அவை செயல்படும். மருத்துவமனையில் உள்ள அவசர கால சிகிச்சைப் பிரிவுடன் நேரடித் தொடா்பில் ஆம்புலன்ஸில் பயணிக்கும் நோயாளியின் உடல் நிலை இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் தேவையான சிகிச்சைகளை வாகனத்தில் பயணிக்கும்போதே தொடங்க முடியும்.
மருத்துவமனையை அடைந்தவுடன் துளியளவும் தாமதமின்றி உயா் சிகிச்சைகள் வழங்கவும் இது வழிவகுக்கிறது என்றாா்.









