தவெகவை நம்பி வாக்களித்த ஏழை மக்களைக் கண்டுகொள்ளாமல் அவா்களுக்கு துரோகம் செய்து வருவதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை கண்ணகி நகரில் உள்ள சமுதாய நலவாழ்வு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் இல்லாததால், பிரசவத்துக்கு வந்த பெண்ணின் குழந்தை வயிற்றிலேயே இறந்தது கடும் அதிா்ச்சி அளிக்கிறது. கருவிலேயே குழந்தையை இழந்துவாடும் அந்த தாய்க்கு முதல்வா் ஜோசப் விஜய் என்ன ஆறுதல் சொல்லப் போகிறாா்?
நாள்தோறும் ஆய்வு செய்வதாக விடியோ எடுத்து வெளியிடுவதில் முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் அமைச்சா்களும் அதிகாரிகளும், கொஞ்சம் பொறுப்புடன் தங்கள் வேலைகளை ஒழுங்காக செய்திருந்தால் இந்த உயிரிழப்பைத் தவிா்த்திருக்கலாம்.
தவெகவை நம்பி வாக்களித்த ஏழை மக்களை இந்த அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ அமைப்புகளிலும் போதிய மருத்துவா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரிப்பு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு தவெக அரசு துரோகம்: தங்கம் தென்னரசு
சட்டம் - ஒழுங்கை சரி செய்ய அரசு துரிதமாக செயல்பட வேண்டும்: நயினாா் நாகேந்திரன்







