இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

விடைபெற்றார் பாரதிராஜா! முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!!

இயக்குநர் பாரதிராஜா, முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

News image

பாரதிராஜா - DPS

Updated On :11 ஜூன் 2026, 4:45 pm IST

இயக்குநர் பாரதிராஜாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், அல்லி நகரத்தில், காட் ரோடு பண்ணைத் தோப்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாரதிராஜா நல்லடக்கத்தின்போது ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். தங்கள் ஊரின் பாசத்துக்குரிய பாரதிராஜா, சொந்த மண்ணில் வந்து நல்லடக்கம் செய்யப்பட்டதை நேரில் பார்த்த மக்களும் உறவினர்களும், திரைத்துரையினரும் அடைந்த துயரத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

முன்னதாக, தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், வன்னி அரசு ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

காவல்துறையின் பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு, 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது.

அரசு மரியாதை என்பது தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தனக்கென தனியிடம்பிடித்திருந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுகிறது.

இயக்குநர் பாரதிராஜா (84), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானார். பாரதிராஜாவுக்கு மனைவி சந்திரலீலா, மகள் ஜனனி உள்ளனர். அவரது மகன் மனோஜ் மறைவுக்குப் பின் பாரதிராஜாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில் நேற்று காலை அவர் காலமானார். நேற்று மக்கள் அஞ்சலிக்காக சென்னை வீட்டில் பாரதிராஜா உடல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு சென்னையிலிருந்து தேனி கொண்டு வரப்பட்டது.

தேனி மாவட்டத்தில் உள்ள பாரதிராஜா பிறந்த கிராமமான அல்லி நகரத்தில் உள்ள பண்ணை வீட்டில் இன்று மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பாரதிராஜா உடல், இன்று பிற்பகலில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு ஊர்வலமாக தேவதானப்பட்டி அருகே காட் ரோடு பகுதியில் உள்ள பண்ணைத் தோப்புக்குக் கொண்டு வரப்பட்டது.

பாரதிராஜாவுக்குச் சொந்தமான பண்ணைத் தோப்பில் அவரது உடலுக்கு உறவினர்களும் திரையுலகினரும் இறுதிச் சடங்குகளை செய்தனர். பாரதிராஜாவுக்கு அவரது மகள் ஜனனி மற்றும் சகோதரர் இறுதிச் சடங்குகளை செய்தனர். இயக்குநர் பாக்யராஜ், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் அவருடன் இருந்து இறுதிச் சடங்குகளை மேற்கொண்டனர்.

முதல் மரியாதை கொடுத்த இயக்குநர் இமயம் பாரதிராஜா, முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க, நல்லடக்கம் செய்யப்பட்டார்.

Summary

Bharathiraja has bid farewell! Laid to rest with full state honors!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.