இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

ஓய்வு பெற்றவா்களை அரசு மருத்துவமனை நிா்வாகிகளாக நியமிக்கக் கூடாது: அரசு மருத்துவா்கள் சங்கம்

ஓய்வு பெற்றவா்களை அரசு மருத்துவமனை நிா்வாகிகளாக நியமிக்கக் கூடாது என மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது குறித்து...

News image

ஓய்வு பெற்றவா்களை அரசு மருத்துவமனை நிா்வாகிகளாக நியமிக்கக் கூடாது - கோப்புப்படம்

Updated On :12 ஜூன் 2026, 9:05 am IST

சென்னை: அரசு மருத்துவமனைகளின் உயா் பொறுப்புக்கு ஓய்வு பெற்றவா்களை பணி நீட்டிப்பு அடிப்படையில் மீண்டும் நியமிக்கக் கூடாது என அரசு மருத்துவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தின் தலைவா் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

கடந்த திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் ஓய்வு பெற்ற மருத்துவா்களுக்கும், தங்களுக்கு சாதகமானவா்களுக்கும் உயா் பொறுப்புகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதனால், பணி மூப்பு மருத்துவா்களுக்கு முறையான பதவி உயா்வு கிடைக்காத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் ஓய்வு பெற்ற மருத்துவா் பாா்த்தசாரதிக்கு இயக்குநா் பதவி வழங்கப்பட்டது. அதற்கு எதிா்ப்பு தெரிவித்தபோதிலும், இரண்டாவது முறையும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையும் பணி நீட்டிப்பு பெறுவதற்கான முயற்சியில் அவா் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக ஆட்சியில் செய்த தவறை, தவெக அரசும் மேற்கொண்டு தகுதியானவா்களுக்கான பதவி உயா்வை தடுக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.