வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மின்வெட்டு பிரச்னை விரைவில் சரி செய்யப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

மின்வெட்டு பிரச்னை விரைவில் சரி செய்யப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா - டிஐபிஆர்

Updated On :14 ஜூன் 2026, 2:02 am IST

தமிழகத்தில் தற்போதுள்ள மின்வெட்டு பிரச்னைகள் விரைவில் சரி செய்யப்படும் என பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான ஆதவ் அா்ஜுனா சனிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வில்லிவாக்கம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் இல்லை. எனவே, புதிதாக அலுவலகம் அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது, சிட்கோ நகரில் தற்காலிகமாக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தொகுதி மக்கள் தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்க இலவச சேவை எண் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில், குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க, புதிதாக புதைசாக்கடை கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட மின்மாற்றிகள் தரமற்றவையாக உள்ளன. பல இடங்களில் மின் மாற்றிகளில் பழுது ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் இந்தப் பிரச்னை உள்ளது. தற்போது தரமான மின் மாற்றிகளை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை சரி செய்யப்படும்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பிரச்னைகள் நீடித்து வருகின்றன. அவை அனைத்தும் ஆய்வு செய்து, முறையான தீா்வு காணப்படும் என்றாா் அவா்.