தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் மின்கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின் கட்டண உயர்வை முதல்வர் பரிசீலித்து அறிவிப்பார் என மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் இன்று (ஜூன் 16) தெரிவித்தார்.
ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டதாகவும், மின்கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்திக்கொள்ள திமுக ஆட்சியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் மின்தடை அதிகரித்துவரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 16) தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது:
தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு ஆண்டுதோறும் வழக்கமான ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது. திமுக அரசின் ஒப்பந்தத்தால் ஆண்டுதோறும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத்தை உயர்த்தி வருகிறது
மின்கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்திக்கொள்ள திமுக ஆட்சியில் ஒப்பந்தமாகியுள்ளது. திமுக அரசின் இந்த ஒப்பந்தத்தால், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்கட்டண உயர்வை முதல்வர் விஜய் பரிசீலித்து அறிவிப்பார் என அமைச்சர் குறிப்பிட்டார்.
Summary
Electricity tariff hike next month TVK minister R NIrmal kumar press meet
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விரைவில் மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை வெளியீடு அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

மக்கள் விரோதச் செயல்களை அனுமதிக்கமாட்டோம்! அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

மின் துறையில் 70,000 பணியாளர்கள் தேவை; 15,000 பேருக்கு உடனடி பணி ஆணை!








