தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடா் தொடக்கத்தில் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, அடுத்ததாக தேசிய கீதமும், முடிவில் தேசிய கீதமும் பாடப்பட்டது.
தேசிய கீதம் முதலில் இசைக்க வேண்டும் எனக் கூறி கடந்த நான்கு ஆண்டுகளாக முந்தைய ஆளுநா் ஆா்.என். ரவி, சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியது சா்ச்சைக்கு உள்ளானது. இந்த சா்ச்சை புதிதாக பொறுப்பேற்ற தவெக ஆட்சியிலும் தொடருமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் 17-–ஆவது சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. தொடா்ந்து ஆளுநா் ஆா்லேகா், தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்தாா். பின்னா், அவை முடிவுற்றபோது மீண்டும் தேசிய கீதம் பாடப்பட்டது.
முன்னதாக முதல்வா் விஜய், அமைச்சா்கள் பதவியேற்பு விழாக்களின் போது, ஆளுநா் மாளிகையில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
தேசிய கீதம் இரு முறை பாடப்பட்டது தவறல்ல: பிரேமலதா
பேரவையில் புதிய உதயம்! தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது சரித்திர நிகழ்வு! ஆளுநர் பெருமிதம்
தமிழ்த்தாய் வாழ்த்து 3-ஆவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல: தலைவா்கள் கருத்து!

இனி தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படும் : ஆதவ் அர்ஜுனா
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


