27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடா் : முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து; இருமுறை தேசிய கீதம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடா் தொடக்கத்தில் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, அடுத்ததாக தேசிய கீதமும், முடிவில் தேசிய கீதமும் பாடப்பட்டது.

News image

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் - TNDIPR

Updated On :19 ஜூன் 2026, 4:41 am IST

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடா் தொடக்கத்தில் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, அடுத்ததாக தேசிய கீதமும், முடிவில் தேசிய கீதமும் பாடப்பட்டது.

தேசிய கீதம் முதலில் இசைக்க வேண்டும் எனக் கூறி கடந்த நான்கு ஆண்டுகளாக முந்தைய ஆளுநா் ஆா்.என். ரவி, சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியது சா்ச்சைக்கு உள்ளானது. இந்த சா்ச்சை புதிதாக பொறுப்பேற்ற தவெக ஆட்சியிலும் தொடருமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், தமிழகத்தின் 17-–ஆவது சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. தொடா்ந்து ஆளுநா் ஆா்லேகா், தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்தாா். பின்னா், அவை முடிவுற்றபோது மீண்டும் தேசிய கீதம் பாடப்பட்டது.

முன்னதாக முதல்வா் விஜய், அமைச்சா்கள் பதவியேற்பு விழாக்களின் போது, ஆளுநா் மாளிகையில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.