அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் வளர்ச்சிக்கு 'வெற்றி தமிழகம்' என்ற தொலைநோக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியுள்ளது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநா் ஆர்.வி. ஆா்லேகர் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
"53. தமிழ்நாட்டின் வளர்ச்சியினை மேலும் ஊக்குவித்திடவும். மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும். அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டங்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் இவ்வரசு செயல்படுத்தும்.
1 தமிழ் அடையாளம் மற்றும் பெருமை.
2 கண்ணியமான வாழ்வு மற்றும் சமூகப் பாதுகாப்பு.
3. மகளிர் நலன்,
4. இளைஞர் நலன்.
5. விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் மீனவர் நலன்.
6. உலகத்தரம் வாய்ந்த கல்வி,
7. வளமான தமிழ்நாடு.
8. சிறந்த மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல்,
9. உலகத்தரமான கட்டமைப்பு மற்றும்
10. மக்கள் நல அரசு நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என பத்து தூண்களை உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையாக இது இருக்கும்.
எத்தனை தடைகள் வந்தாலும், அனைத்தையும் தகர்த்தெறிந்து ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தைத் தந்து அதன் மூலம் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்திட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. அரசின் நலத் திட்டங்கள் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைய இந்த அரசு செயலாற்றும். இந்த அரசால் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் மாநிலத்தின் நிதிநிலையை சீரமைத்து வருங்காலங்களில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.
மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது அரசின் கடமை. பேரவை உறுப்பினர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றார்.
Summary
TN governor speech in TVK govt first TN assembly session
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







