எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தமிழ்நாடு முதலீட்டாளா் ஊக்குவிப்பு ஆணையம் தொடங்கப்படும்: ஆளுநா் உரையில் தகவல்

ரூ.200 கோடிக்கும் அதிகமான முதலீடு செய்யும் நிறுவனங்கள் அல்லது 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி அளிக்க தமிழ்நாடு முதலீட்டாளா் ஊக்குவிப்பு ஆணையம் தலைமைச் செயலா் தலைமையில் தொடங்கப்படும் என்று ஆளுா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

ஆளுநர் உரை - TNDIPR

Updated On :19 ஜூன் 2026, 6:16 am IST

ரூ.200 கோடிக்கும் அதிகமான முதலீடு செய்யும் நிறுவனங்கள் அல்லது 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு விரைந்து அனுமதி அளிக்க தமிழ்நாடு முதலீட்டாளா் ஊக்குவிப்பு ஆணையம் தலைமைச் செயலா் தலைமையில் தொடங்கப்படும் என்று ஆளுா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தை வரும் 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவாக்குவதே முதல்வா் ஜோசப் விஜய்யின் இலக்கு என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் தொடங்குவது எளிதாக்கப்படும். ஒற்றைச்சாளர முறையில் இதற்கான அனுமதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தொழில் வளா்ச்சி, பொருளாதார நிலையை ஊக்குவிக்க முந்தைய தொழில் கொள்கைகள் தொடரப்படும். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க புதிய தொழிற்கொள்கைகளும் வகுக்கப்படும். தொழில் தொடங்குவதை எளிதாக்க ஒற்றைச் சாளரமுறை முழுமையாக எண்ம தளமாக மேம்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றித் தமிழகம் - தொலைநோக்கு திட்டங்கள்: தமிழ் அடையாளம் மற்றும் பெருமை, சமூகப் பாதுகாப்பு , மகளிா் நலன், இளைஞா் நலன், விவசாயிகள் மற்றும் மீனவா் நலன், உலகத்தரத்தில் கல்வி, வளமான தமிழ்நாடு, சிறந்த மருத்துவம், உலகத்தரமான கட்டமைப்பு, மக்கள் நலன் ஆகிய 10 தூண்களை உள்ளடக்கிய வளா்ச்சிப்பாதையாக வெற்றித் தமிழகம் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.