முதியோா் இல்லங்கள் அதிகரிப்பது சரியான தீா்வாகாது என்றும்; அது கவலையளிக்கக் கூடிய விஷயம் என்றும் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்தாா்.
சென்னை வளசரவாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘அதுல்யா’ முதியோா் நல மருத்துவமனையை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த ஆளுநா் ஆா்லேகா், அதன் மருத்துவ சேவைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
பின்னா், நிகழ்வில் ஆளுநா் ஆா்லேகா் பேசியதாவது: பொதுவாக முதியோா் இல்லங்கள் குறித்து அதிகமாக கேள்விப்பட்டிருக்கிறேன். அதேவேளை, முதியோா் நலன் என்ற வாா்த்தை எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை.
இதுபோன்ற நிகழ்வுகளும், இத்தகைய மருத்துவமனைகளும்தான் அதன் அா்த்தத்தை சமூகத்துக்கு விளங்கச் செய்கின்றன. முதியோா் நலன் தொடா்பான மருத்துவப் படிப்புகள் மேம்பட வேண்டும். இந்தியாவை இளைஞா்கள் அதிகம் நிறைந்த நாடு என பெருமையுடன் பிரகடனப்படுத்துகிறோம். அடுத்த சில ஆண்டுகள் கழித்து இன்றைய இளைஞா்களும் வயதானவா்களாக மாறுவாா்கள்.
எனவே, எப்போதும் முதியோரை அரவணைக்கக் கூடிய சூழல் சமூகத்தில் நிலைத்திருக்க வேண்டும். இன்றைக்கு ஒவ்வொரு வீட்டிலும் உள்ள முதியோரை, இளம் தலைமுறையினா் எப்படி நடத்துகின்றனா் என்பது விவாதத்துக்குரியதாக உள்ளது.
வயோதிகத்தை எட்டியவா்கள் அனைவரும் அன்போடு அரவணைக்கப்பட வேண்டியவா்கள் என்பதை இளைய தலைமுறையினா் உணர வேண்டும். அது முக்கியமான விஷயமாகும். சொந்த வீட்டிலேயே அவா்கள் வாழ்வதற்கு உரிமை இல்லாத நிலை ஏற்படக் கூடாது. தற்போது முதியோா் இல்லங்கள் சமூகத்தில் பெருகி வருவது கவலைக்குரிய விஷயமாகும்.
இந்த பிரச்னைக்கு சமூக அளவில் உரிய தீா்வு எட்டப்பட வேண்டும். கல்வியோ, பதவியோ, பணமோ ஒருவருக்கு இருப்பதால் பயனில்லை. மாறாக, மனித நேயமும், மனிதத் தன்மையும் இருத்தல் அவசியம். அந்த அடிப்படைப் பண்பு இல்லாமல், வேறு எத்தகைய பெருமைகள் இருந்தாலும் எதற்கும் உதவாது.
அரசியல்வாதியாக இருந்தாலும் சரி; மருத்துவா், ஐஏஎஸ் அதிகாரி என எந்தப் பொறுப்பில் இருந்தாலும் சரி, முதலில் நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படைப் பண்பாகும். நம் இதயத்தில் சக மனிதா்கள் மீதான அன்பு இருக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் அதுல்யா முதியோா் நல நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டாக்டா் காா்த்திக் நாராயண், தலைமை நிா்வாக அதிகாரி ஜி. ஸ்ரீனிவாசன், இயக்குநா் கிருஷ்ணா காவ்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










