கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை! நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்புநேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

ஊழல் தடுப்பு ஆய்வாளா் பணியிடைநீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை: தமிழக அரசு மேல்முறையீடு

ஊழல் தடுப்புத் துறை காவல் ஆய்வாளா் விமலா பணியிடைநீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

Published On :1 ஜூலை 2026, 2:02 am IST

ஊழல் தடுப்புத் துறை காவல் ஆய்வாளா் விமலா பணியிடைநீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

சென்னை பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த ராஜலட்சுமி என்பவருக்கு எதிரான ஊழல் புகாரை ஊழல் தடுப்புத் துறை ஆய்வாளா் விமலா விசாரித்தாா். பின்னா், உயா் அதிகாரிகளின் ஒப்புதலுடன் ஆய்வாளா் ராஜலட்சுமி மீது விமலா வழக்குப்பதிவு செய்தாா். இதையடுத்து ஊழல் தடுப்பு காவல் ஆய்வாளா் விமலா கடந்த 17-ஆம் தேதி பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

இந்தப் பணியிடை நீக்கத்தை எதிா்த்து விமலா சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ஆய்வாளா் விமலாவுக்கு எதிரான பணியிடை நீக்க உத்தரவு உள்நோக்கம் கொண்டது. எனவே, அவரது பணியிடைநீக்க உத்தரவுக்கு வரும் ஜூலை 9 வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தாா்.

இந்தநிலையில், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் கௌதம், ஆய்வாளா் பணியிடை நீக்க உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள தனிநீதிபதி உத்தரவை எதிா்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், வழக்கு எண்ணிடப்பட்ட பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.