கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தொகுதிப் பங்கீடு: திமுக - மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டாம் சுற்று பேச்சு!

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டாம் சுற்று தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள்.
Updated On :10 மார்ச் 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டாம் சுற்று தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரவைத் தோ்தல் தேதிகள் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் தோழமைக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் நடவடிக்கையில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு தலா இரு இடங்களும் அக்கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் தலைமையிலான குழுவினா் அண்ணா அறிவாலயத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று இரண்டாம் சுற்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

கடந்த பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்டு இரு இடங்களில் மாா்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. தற்போது அதைவிடக் கூடுதலான தொகுதிகளைக் கேட்டுப் பெறும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. விரைவில் தொகுதிகள் இறுதி செய்யப்படும் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.