பெரம்பூர் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அலுவலரிடம் விஜய் நேரில் புகார்!
தவெக பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விஜய் புகார்
தேர்தல் அலுவலரிடம் விஜய் புகார்
DNS
தேர்தல் அலுவலரிடம் விஜய் புகார்
DNS
தவெக பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்க தேர்தல் அலுவலரை விஜய் சந்திக்கவுள்ளார்.
சென்னை பெரம்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அனுமதி மறுப்பு தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து புகாரளிக்க கட்சித் தலைவர் விஜய் சென்றுள்ளார்.
தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்தல் அலுவலரிடம் விஜய் புகார்
முன்னதாக, பெரம்பூரில் பிரசாரத்துக்கு அனுமதிகோரிய தவெகவின் மனுவில், விஜய்யின் தெருமுனைப் பிரசாரம் அம்பேத்கர் கல்லூரி முதல் சர்மா நகர் வரை சாலை வழியாகச் சென்று, வில்லிவாக்கத்தில் முடிவடைவதாகக் குறிப்பிட்டிந்தனர்.
தொடர்ந்து, முல்லை நகர் சந்திப்பில் நடைபெறும் தெருமுனைப் பிரசாரத்தில் சுமார் 3,000 பேர் கூடுவார்கள் என்றும், சுமார் 20 ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த அனுமதி கோரியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், முல்லை நகர் சந்திப்பு பகுதியில் 3,000 பேர் கூடுவதற்கு உகந்தது அல்ல எனக் கூறி, அனுமதி கடிதத்தை காவல்துறை நிராகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...