சென்னை மதுரவாயலில் உரிய ஆவணங்கள் இன்று கொண்டுவரப்பட்ட ரூ. 5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதன்படி, தனிநபர் ஒருவர் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ. 50,000 வரை ரொக்கமாக எடுத்துச் செல்லலாம்.
அதற்கு மேலாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பிற பொருள்கள் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக தேர்தல் செலவினக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் தமிழகத்தில் இதுவரை ரூ. 270 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இன்று சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது தனியார் ஏஜென்சி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
டாஸ்மாக் கடைகளில் வசூலான பணம் என கூறப்பட்ட நிலையில் அலுவலகத்தில் இருந்து உரிய ஆவணம் கொண்டு வந்ததை அடுத்து அதுதொடர்பாக அதிகாரிகள் சரிபார்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
Rs. 5 crore cash seized in Maduravoyal, Chennai by election flying squad
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூடலூா் அருகே ரூ.2.27 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ. 1 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல்!

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

5 மாநிலங்களில் ரூ. 651கோடி! தமிழ்நாட்டில் ரூ.170 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




