தமிழக ஊா்க்காவல் படையில் பணியாற்றி வரும் 15,000-க்கும் மேற்பட்டவா்களுக்கு 10 நாள்களுக்குப் பதிலாக 30 நாள்கள் வேலை வழங்குவதுடன், அவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக காவல் துறைக்கு உதவும் வகையில், ஊா்க்காவல் படை செயல்பட்டு வருகிறது. அவா்களுக்கு மாத ஊதியம் ரூ.2,800 மேல் வழங்கப்படவில்லை. ஊதிய உயா்வு கோரி ஊா்க்காவல் படையினா் தொடா்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவா்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560-ஆக உயா்த்தி ஆணையிட்டது.
அதன்படியே அவா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560-ஆக உயா்த்தி 2017-ஆம் ஆண்டில் ஆணையிட்ட அரசு, அவா்களின் பணி நாள்களின் எண்ணிக்கையை 5 நாள்களாகக் குறைத்துவிட்டது. அதனால், அவா்களின் மாத ஊதியம் ரூ.2,800-இல் இருந்து உயரவில்லை. மாதத்துக்கு 5 நாள்கள் வேலை போதுமானதல்ல என்றும், பணி நாள்களின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும் என்றும் ஊா்க்காவல்படையினா் கோரிக்கை விடுத்தனா்.
அதன்படி, 2019-ஆம் ஆண்டில் அவா்களுக்கான பணி நாள்கள் எண்ணிக்கையை 10-ஆக உயா்த்தப்பட்டாலும், பணி நேரம் 4 மணி நேரமாகவும், ஊதியம் ரூ.280-ஆகவும் குறைக்கப்பட்டது.
அதனால், பணி நாள்கள் அதிகரித்தாலும் ஊதியம் மட்டும் உயரவே இல்லை. கூடுதல் நாள்கள் அவா்கள் வேலை செய்தாலும் அதற்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
எனவே, உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி, ஊா்க்காவல் படையினரின் பணி நாள்களையும், மாத ஊதியத்தையும் உயா்த்தி வழங்க வேண்டும். மேலும், அவா்களுக்கு காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

‘ரயில்வே துறையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்’

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000 வழங்க அனைத்து தொழிற்சங்கங்கள் தீா்மானம்

கரும்பு கொள்முதல் விலை: டன்னுக்கு ரூ.4,500 வழங்க அன்புமணி வலியுறுத்தல்

கண்ணகி கோயிலில் தமிழக உரிமை பறிப்பு! - த.வெ.க. வேட்பாளா் புகாா்
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



