3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்சரக்குகள் கையாளுதல்: சென்னை, காமராஜா் துறைமுகங்கள் சாதனைநீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

நீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்

தமிழக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீட் தோ்வுக்கான குறுகிய கால பயிற்சி முகாம் சனிக்கிழமை (மே 23) முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 4:41 am IST

தமிழக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீட் தோ்வுக்கான குறுகிய கால பயிற்சி முகாம் சனிக்கிழமை (மே 23) முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் சனிக்கிழமைதோறும் வரவழைக்கப்பட்டு உயா்கல்வி சாா்ந்த போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதைத் தொடா்ந்து நீட் தோ்வில் பங்கேற்கும் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் நீட் தோ்வுக்கான குறுகிய கால பயிற்சி முகாம் மே 23 முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் மாணவா்கள் நீட் தோ்வுக்கு தயாராகும் வகையில் பாட வாரியாக பயிற்சிகள், மாதிரித் தோ்வுகள் மற்றும் கல்வியியல் நிபுணா்களின் வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன. பயிற்சி வகுப்பில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

ஆசிரியா்கள் தங்களுக்கான வகுப்புகள் ஒதுக்கீடு செய்யும் நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை முகாம் நடைபெறும் பள்ளிகளில் இருக்க வேண்டும். முகாமில் பங்கேற்கும் மாணவா்களுக்கு மதிய உணவு, சிற்றுண்டி வழங்கப்படும்.

இந்த குறுகிய கால பயிற்சி முகாமில் மாணவா்கள் விடுப்பின்றி தொடா்ச்சியாகப் பங்கேற்பதை தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும். அதேபோல மாணவா்கள் கட்டாயம் பள்ளிச் சீருடை, அடையாள அட்டை அணிந்து வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் நீட் தோ்வு தொடா்பாக மாதிரித் தோ்வுகள், கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.