போராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கை
/

தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம்

தமிழ்நாட்டில் சில இடங்களில் மின்வெட்டு ஏற்படுவது குறித்து எரிசக்தி வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் விளக்கமளித்துள்ளார்.

News image

அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் - கோப்புப்படம்.

Updated On :23 மே 2026, 5:28 pm IST

தமிழ்நாட்டில் சில இடங்களில் மின்வெட்டு ஏற்படுவது குறித்து எரிசக்தி வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை. தமிழ்நாட்டிற்கு தேவையான அளவிற்கு மின்சாரம் உள்ளது. தமிழ்நாட்டில் சில இடங்களில் மின்வெட்டு ஏற்படுவது ஏன் என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. பீக் ஹவர்சில் உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பதால் மின்தடைகள் ஏற்படுகின்றன. நிலத்தடி மின்கம்பிகள் பழுது, ஜம்பர் கட் மற்றும் மின்கம்பி துண்டிப்பால் மின்தடைகள் ஏற்படுகின்றன.

மின்மாற்றியில் பழுது அல்லது மின்மாற்றியில் அதிக சுமை காரணமாக மின்தடைகள் ஏற்படுகின்றன. மழை, காற்று, இடி போன்ற வானிலை காரணமாக மின்தடைகள் ஏற்படுகின்றன. மின்தடைகளை உடனுக்குடன் சரிசெய்ய பராமரிப்பு குழுக்கள் அனைத்து மின்விநியோக வட்டங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன. மின்தடைகளை சரிசெய்ய 24 மணிநேர கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தற்காலிக பணியாளர்கள் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒருசில அதிகாரிகள் மெத்தனப்போக்காக உள்ளனர். பெரும்பாலான பணியாளர்கள் இரவு, பகலாக பணியாற்றுகின்றனர். தனி நபர்கள் சிலரின் தவறுகளாலும் மின்வெட்டு ஏற்படுகிறது. தவறு செய்யும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்யும் தனி நபர்களை சிலர் தூண்டிவிடுவதாகவும் தகவல் உள்ளது. சீரமைப்பு பணிகள் குறித்து முதல்வர் தினந்தோறும் கேட்கிறார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Summary

Minister C.T.R. Nirmalkumar has given a clarification regarding the power outages occurring in a few places across Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.